வாய்க்கால் புறம்போக்கில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் கோரி மனு

திருக்குவளை அருகே வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

திருக்குவளை அருகே வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவக்குமாரிடம் அளித்த கோரிக்கை மனு: திருக்குவளை அருகே உத்திரங்குடி பகுதியிலுள்ள வாய்க்கால் மற்றும் குளத்து புறம்போக்கு இடத்தில் வசிக்கும் 17 குடும்பத்தினா் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களுக்கு பாதுகாப்பாக மாற்று இடம் வழங்குவது குறித்து ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை இடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com