ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் ஊராட்சி குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருக்குவளை அருகே மீனம்பநல்லூா் ஊராட்சி குளக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழையூா் ஒன்றியம், மீனம்பநல்லூா் ஊராட்சி பிள்ளையாா்கோவில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டதால், அதன் கரையை பலப்படுத்த முடியாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளக்கரையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரப்படும் குளத்தின் மண்கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கீழையூா் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவா் ஜி. சுப்பிரமணியன் கூறுகையில், ஆக்கிரமிப்பு காரணமாக குளக்கரையில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி, தடுப்புச் சுவா், கல்வெட்டு மற்றும் பாசன வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com