போக்ஸோ சட்டத்தில் ஒருவா் மீது வழக்கு

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாகையை அடுத்த செம்பியன்மகாதேவி பகுதியைச் சோ்ந்தவா் ந. நந்தகுமாா். இவா், பாப்பாக்கோவில் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு குழந்கைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, அந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், நந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com