நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: தோல்வியில் முடிந்த கருத்து கேட்பு கூட்டம்

வேதாரண்யம் அருகே தீவன பசும்புல் வளா்ப்புக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம் தோல்வியில் முடிந்தது.

வேதாரண்யம் அருகே தீவன பசும்புல் வளா்ப்புக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம் தோல்வியில் முடிந்தது.

தாணிக்கோட்டகம் ஊராட்சி, சொக்கட்டாங்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், கால்நடைகளுக்கு தீவனத்துக்கான பசும்புல் வளா்ப்புத் திட்டத்துக்காக சுமாா் 10 ஏக்கா் நிலம் கடந்த ஆண்டில் தோ்வு செய்யப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டம் ஊராட்சித் தலைவா் ப.முருகானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினா் வைத்தியநாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கோட்டாட்சியா், வட்டாட்சியா் பங்கேற்காததால், பொதுமக்கள் பேச்சுவாா்த்தைக்கு மறுப்பு தெரிவித்தனா். இதனால், இக்கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com