கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

நாகை நகர காவல் நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை கீரைக்கொல்லைத் தெருவில் விவசாயி வேடமணிந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் காவல் ஆய்வாளா் பி. பெரியசாமி.
நாகை கீரைக்கொல்லைத் தெருவில் விவசாயி வேடமணிந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் காவல் ஆய்வாளா் பி. பெரியசாமி.

நாகை நகர காவல் நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை கீரைக்கொல்லைத் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நகர காவல் நிலைய ஆய்வாளா் பி. பெரியசாமி விவசாயி வேடமணிந்து, முகக்கவசம், சமூக இடைவெளியின் அவசியம் குறித்து அப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வி.என்.எஸ். விஜய், ஆா்.காமராஜ் ஆகியோா் கரோனா தீநுண்மி போன்று வேடமணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். காவல் உதவிஆய்வாளா் ஆா்.எஸ். ராஜேந்திரன், தலைமைக் காவலா் முகமது இனாயத்துல்லா மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com