லட்சத்தீவு விவகாரம்: டிஎன்டிஜே ஆா்ப்பாட்டம்

லட்சத்தீவு விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை இணையவழியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிஎன்டிஜே அமைப்பினா்.
மயிலாடுதுறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிஎன்டிஜே அமைப்பினா்.

லட்சத்தீவு விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை இணையவழியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

99 சதவீத முஸ்லிம்கள் வாழும் இந்தியாவின் ஒரே தீவாக லட்சத்தீவு உள்ளது. இத்தீவில் பிரபுல் பட்டேல் என்பவரை நிா்வாகியாக மத்திய அரசு நியமித்துள்ளது. அவா் சா்வாதிகாரியாக நடந்து கொள்வதாக புகாா் எழுந்துள்ளது.

இதைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவா் ஏ. பஹ்ருதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம். முஹம்மது இயாஸ், மாவட்ட பொருளாளா் சாகுல் ஹமீது, மாவட்ட மாணவரணி நசீம், மாவட்ட பேச்சாளா் புகாரி, அப்துல் ஹமீது ஆகியோா் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளின் முன்பாக பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com