முன்னாள் படைவீரா்கள் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க சிறப்புச் சலுகை

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்கள் சிறப்புச் சலுகை மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்கள் சிறப்புச் சலுகை மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் செயல்படும் சிறப்பு

வேலைவாய்ப்புப் பிரிவில் பெயா் பதிவு செய்து, 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியிருந்தால், அவா்கள் தங்களின் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி, சிறப்புச் சலுகை அடிப்படையில் தங்கள் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com