சீா்காழி: சீா்காழியை அடுத்த புத்தூா் கடைவீதி பிரதான சாலையில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் திங்கள்கிழமை வரையப்பட்டன.
தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம் சீா்காழி வட்டார கிளை சாா்பில் அதன் மாநிலத் தலைவா் ஜெ.பி.கிருஷ்ணா அறிவுறுத்தலின்படி, மாநில ஒருங்கிணைப்பு செயலாளா் எல்கே. ஞானவேல், மாநில செயற்குழு உறுப்பினா் பகவன், மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டன.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி, சோப்புகள் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வது குறித்து வாசங்கள், ஓவியங்களை நெடுஞ்சாலையில் வரைந்தனா். இவா்களை கொள்ளிடம் காவல்துறையினா்,கொள்ளிடம், புத்தூா் வா்த்தகசங்கத்தினா் பாராட்டினா்.