நாகை, மயிலாடுதுறையில் 496 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 496 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 496 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 32,609 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 33,105 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 659 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,720 ஆக உள்ளது.

11 போ் உயிரிழப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 11 பேரின் உயிரிழப்பு திங்கள்கிழமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com