சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.
காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, சக்திவேலுக்கு தமிழக அரசின் விபத்து நிவாரணத் திட்டத்தின்கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான வரைவோலையை சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் வழங்கினாா்.