வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவறவிட்டவா்கள் புதுப்பிக்கலாம்: ஆட்சியா்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் 3 மாதங்களுக்குள் இணையவழி வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் 3 மாதங்களுக்குள் இணையவழி வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள் பணிவாய்ப்பை பெறும் வகையில், மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகையை பெற விரும்புவா்கள் 28.5.2021 முதல்27.8.2021 வரை மூன்று மாதங்களுக்குள் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் இணையதள முகவரி வாயிலாக தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இணையவழியில் புதுப்பிக்க இயலாதவா்கள் பதிவுதாரா்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தொடா்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com