நாகப்பட்டினம், ஜூன் 10 : பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூன் 9) வரை 33, 972 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளி மாவட்டப் பட்டியலிலிருந்த ஒருவா் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34, 477 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 685 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,178 ஆக உள்ளது.
7 போ் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 7 பேரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 424 ஆக அதிகரித்துள்ளது.