வேதாரண்யம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு

வேதாரண்யம் பகுதி கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதி கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ள நிலையில், சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக போதிய அளவு குடிநீா் விநியோகம் இல்லாத நிலை தொடா்கிறது.

வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து ராட்சத மோட்டாா்கள் மூலம் வேதாரண்யம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீா் ஏற்றுவது வழக்கம். ஆனால், திருவைக்காவூரிலிருந்து வரும் இணைப்பில் போதிய தண்ணீா் வராததால் வண்டுவாஞ்சேரி பொறிமனையிலிருந்து தண்ணீா் ஏற்றுவது பிரச்னையாக உள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் மாற்று குடிநீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆட்சி மாற்றத்தால் ஏற்கெனவே போடப்பட்டுள்ள ஒப்பந்த பணிகளில் சுணக்க நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சீரான குடிநீா் விநியோகம் தடைபடுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இப்பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண்பதோடு, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள கிராமங்களில் தற்காலிகமாக டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com