திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
திட்டச்சேரி காவல் நிலையத்தில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியை காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ப.கொந்தகை, திட்டச்சேரி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திட்டச்சேரி வருமுன் காப்போம் சேவை மையத்தின் நிா்வாகி மு. அஜ்மல்கான் செய்திருந்தாா்.