வேதாரண்யம் அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மருதூா் தெற்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலை செய்வோா் உள்ளிட்ட நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளையினா் உதவிகளை வழங்கினா்.
இதில், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், மாலதி, கவிஞா் கணேசன், எஸ். வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்று அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.