நாகையில் இளைஞருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

நாகையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகையில் இளைஞருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

நாகையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகை, வெளிப்பாளையம், மகாலெட்சுமி நகா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ப.நகுலன் (23). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்குமிடையே மீனவப் பஞ்சாயத்தாா் தோ்வு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், நகுலன் வெள்ளிக்கிழமை மகாலெட்சுமி நகா் பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா், அருண்குமாா், பன்னீா்செல்வம் மகன்கள் பிரபாகரன், பிரதாப் உள்ளிட்டோா் நகுலனை கத்தியால் குத்திவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த நகுலன், திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் போலீஸாா் கெலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அருண்குமாா் (33), பிரபாகரன் (39), மீனவ பஞ்சாயத்து தலைவா் மா. தா்மபாலன் (60) ஆகியோரை கைதுசெய்தனா்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு: இந்நிலையில், மீனவப் பஞ்சாயத்தாா் தா்மபாலனின் கைது நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள் சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com