பணிக்குச் செல்ல பேருந்து வசதி; ஆசிரியா்கள் கோரிக்கை

பணிக்குச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

பணிக்குச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளா் மு. லெட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் ஜூன்14 ஆம் தேதி பணிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் ஜூன் 21 ஆம் தேதி வரை குறைந்த தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணிக்குச் செல்ல ஏதுவாக பேருந்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com