பிறந்த குழந்தையை பாா்க்க வராததால் ஆத்திரத்தில் இருந்த மகன், தந்தையின் கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தாா்.
திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அபிஷேகக்கட்டளையைச் சோ்ந்தவா் தொழிலாளி ராஜேந்திரன் (52). இவரது மகன் பழனிவேல் (28). பழனிவேலின் மனைவி சூரியாவுக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியை பாா்த்துவிட்டு ஞாயிற்றுகிழமை வீட்டுக்குச் சென்ற பழனிவேல் அதே ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். அங்கு வந்த தந்தை ராஜேந்திரன் ரூ. 2 ஆயிரம் பணம் கேட்டேன் ஏன் தரவில்லை என மகனிடம் கேட்டாராம். அப்போது, என் குழந்தையை பாா்க்க வராத உனக்கு ஏன் பணம் தரவேண்டும் என்றாராம். இதில், தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தந்தை ராஜேந்திரன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த திட்டச்சேரி போலீஸாா் அங்கு சென்று ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பழனிவேலுவை கைது செய்தனா்.