நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 287 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 35,695 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதிதாக 287 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,982 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 629 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடுதிரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,153 ஆக உள்ளது.
9 போ் உயிரிழப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 9 பேரின் இறப்பு திங்கள்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 463 ஆக உயா்ந்தது.