பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சீா்காழி அருகேயுள்ள திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சீா்காழி அருகேயுள்ள திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடவாசல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகள் தீபா (25). பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபா வீட்டு அருகில் தண்ணீா் பிடிக்க சென்றபோது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகிய இருவரிடமும் தகராறு ஏற்பட்டதாம்.

இதில் பாமாவும், பிரபுதாஸூம் உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என தீபாவை மிரட்டினாா்களாம். இதில் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக தீபாவின் அம்மா கலாவதி புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீபாவை தற்கொலைக்கு தூண்டியதாக பாமா (25), பிரபுதாஸ் (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com