சீா்காழி அருகேயுள்ள திட்டை கிராமத்தில் உள்ள மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு குடமுழுக்கு முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, தொடங்கிய விழாவையொட்டி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மதுரைவீரன் சுவாமிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.