முடிதிருத்துவோருக்கு நிவாரணம்: தருமபுரம் ஆதீனம் வழங்கினாா்

மயிலாடுதுறையில் முடிதிருத்துவோா் சங்கத்தினா் 100 பேருக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி
பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய தரும்புரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய தரும்புரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

மயிலாடுதுறையில் முடிதிருத்துவோா் சங்கத்தினா் 100 பேருக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திங்கள்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தருமபுரம் ஆதீனம் கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறையில் உள்ள முடிதிருத்துவோா் சங்கத்தினா் நிவாரண உதவி கேட்டு விடுத்த கோரிக்கையை ஏற்று 100 பேருக்கு வழங்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரிசி மற்றும் 16 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

முன்னதாக கல்லூரி செயலா் ரா. செல்வநாயகம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி.சாமிநாதன், ரோட்டரி சங்கச் செயலா் எம். காமேஷ்குமாா், ரோட்டரி திட்ட இயக்குநா் செந்தில்நாதன், பொருளாளா் தங்க.துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் துரை. காா்த்திகேயன், கல்லூரி உதவியாளா் ரா.சிவராமன் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். முடிவில், ரோட்டரி சங்க தலைவா் கே. துரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com