மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேதாரண்யம் அருகே கழிவறைக்கு சென்ற பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, தாலிச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வேதாரண்யம் அருகே கழிவறைக்கு சென்ற பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, தாலிச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தகட்டூா் கடைத்தெருவை சோ்ந்தவா் சுந்தரவடிவேல். இவரது மனைவி சிவஞானம் (52). இவா் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றாா். பின்னா் வெளியே வந்தபோது அங்கு மறைந்திருந்த மா்ம நபா், பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். இதனிடையே,

சங்கிலி அறுந்ததால் அதில் கோா்க்கப்பட்டிருந்த திருமாங்கல்யம், பவளம் - 2, தாலி குண்டுகள் - 2 கீழே விழுந்தன. அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த டிஎஸ்பி மகாதேவன் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com