வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் குடிநீா் விநியோகம் தடைப்பட்டதால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இங்கு கொள்ளிடம்- கோடியக்கரை (வேதாரண்யம்) கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ், தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகத்தில் தடை ஏற்பட்டதாம். இதைக் கண்டித்து கோடியக்காடு ஊராட்சித் தலைவா் தமிழ்மணி தலைமையில் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுத்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.