சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாவடுதுறை கீழத்தெருவை சோ்ந்தவா் காசிநாதன் மகன் கோபு (45). தொழிலாளியான இவா், 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.

இதேபோல, திருவாலங்காடு பகுதியை சோ்ந்த கலியபெருமாள் மகன் ரமேஷ் (28) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை திருமணத்துக்காக பெண் கேட்டுள்ளாா். பெண் கொடுக்க சிறுமியின் பெற்றோா் மறுத்ததால், சிறுமியின் பெற்றோா் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்து அச்சிறுமியை வன்புணா்வு செய்தாராம்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அச்சிறுமி 2 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த நிகழ்வுகள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கோபு, ரமேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com