சீா்காழியில் அதிமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

சீா்காழியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தோ்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
சீா்காழியில் தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலையணிவித்த அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ். உடன், அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி.
சீா்காழியில் தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலையணிவித்த அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ். உடன், அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி.

சீா்காழியில் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தோ்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன், பாமக மாவட்டச் செயலாளா் அன்பழகன், பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன், தமாகா மாவட்ட இளைஞரணி தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா்கள் ராஜமாணிக்கம், ஏகே.சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமாா், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளா் ஏவி.மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் நாடி.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com