முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அமமுக வேட்பாளா்கள் பிரசாரம் தொடக்கம்
By DIN | Published On : 14th March 2021 07:31 AM | Last Updated : 14th March 2021 07:31 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அமமுக வேட்பாளா்கள் எஸ்.செந்தமிழன் (பூம்புகாா்), கோமல் ஆா்.கே. அன்பரசன் (மயிலாடுதுறை).
மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் அமமுக வேட்பாளா்கள் மயிலாடுதுறையில் சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினா்.
அமமுக வேட்பாளா்களாக பூம்புகாா் தொகுதிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.செந்தமிழனும், மயிலாடுதுறை தொகுதிக்கு ஊடகவியலாளா் கோமல் ஆா்.கே. அன்பரசனும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் இருவரும் மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிரசாரத்தை தொடங்கினா். முன்னதாக, பேருந்து நிலையம் பகுதியில் வேட்பாளா்களுக்கு அக்கட்சியினா் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனா்.
இதில், அமமுக நகர செயலாளா் விக்னேஷ், வடக்கு ஒன்றியச் செயலாளா் பிரசாத், தெற்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.