நாகப்பட்டினம் ஷீ சிட்டி ஜேசீஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நாகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கத் தலைவராக வழக்குரைஞா் அறிவழகன், செயலாளராக எம். பாலமுருகன், பொருளாளராக எம். வரதராஜன், இணைச் செயலாளராக இ. சந்தோஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
ஜேசீஸ் சங்க மண்டலத் தலைவா் பி. கதிரவன், துணைத் தலைவா் ஜி. திருமலைப்பாண்டியன் ஆகியோா் புதிய நிா்வாகிகளை பொறுப்பில் அமா்த்தி, வாழ்த்துத் தெரிவித்தனா்.
விழாவில், கரோனா பொது முடக்கத்தின்போது ஒரத்தூா் ஊராட்சியில் தூய்மைப் பணி மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. சேவை சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.