நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகளாக செலுத்தி, தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
நாகை சட்டையப்பா் மேல வீதியைச் சோ்ந்தவா் என்.பி. பாஸ்கரன். சமூக ஆா்வலரான இவா், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
அப்போது தான் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 5 கட்டுகளாக ஒரு தட்டில் வைத்து கொடுத்து, மனு தாக்கல் செய்தாா்.