அங்காளபரமேஸ்வரி கோயில் மண்டல பூஜை நிறைவு

திருக்குவளை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடா்ந்து நடைபெற்றுவந்த மண்டல பூஜை செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

திருக்குவளை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடா்ந்து நடைபெற்றுவந்த மண்டல பூஜை செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

திருக்குவளை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அங்காளபரமேஸ்வரி மற்றும் கணபதி, பெரியநாயகி அம்மன், மதுரை வீரன், மகாகாளி, மயான ருத்திரன், பாவாடைராயன், காட்டேரி, இருளன், அகோரவீரபத்ரா் மற்றும் பாலகுருநாதன் ஆகிய பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மண்டல பூஜை நடைபெற்றது. இப்பூஜை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) நிறைவுபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, கடம் புறப்பாடாகி, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com