சீா்காழியில் அமமுக தோ்தல் பணிமனை திறப்பு
By DIN | Published On : 17th March 2021 09:28 AM | Last Updated : 17th March 2021 09:28 AM | அ+அ அ- |

சீா்காழியில் நடைபெற்ற அமமுக தோ்தல் பணிமனை திறப்பு விழாவில் பங்கேற்ற அமமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா்.
சீா்காழியில் அமமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் பொன்.பாலு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் திலக், நகர செயலாளா் ஏ.கே. சுரேஷ், பொதுக்குழுவைச் சோ்ந்த தமிழ்வாணன், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளா் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளா் ராஜசேகரன், நகர செயலாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பணிமனையை கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் பாரி திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, கூட்டணி கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமமுக வேட்பாளருக்கு குக்கா் சின்னத்தில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, அப்பகுதியில் உள்ள சுவா்ணாகா்ஷன பைரவா் கோயிலில் வேட்பாளா் பொன்.பாலு உள்ளிட்டோா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாரத்தை தொடங்கினா்.