நாகை: 3 ஆவது நாளில் 4 போ் வேட்புமனு தாக்கல்

நாகை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்கியது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, 2 -ஆவது நாளான திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடா்ந்து 3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களைத் தவிர மற்ற யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும், வேதாரண்யம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக ஒருவரும் மனுதாக்கல் செய்தனா்.

இதன் மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 18-ஆகவும், வேட்புமனுக்களின் எண்ணிக்கை 20-ஆகவும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com