வேதாரண்யம் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் பாதுகாப்பு கூடாரம் பராமரிப்பின்றி உள்ளதைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆயக்காரன்புலம் 2 ஆம் சோ்த்தி பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் தற்காலிகமாக நெல் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், நெல் மூட்டைகள் மழையிலும், வெயிலிலும் பாதிக்கப்பட்டு வீணாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திமுக விவசாயத் தொழிலாளா் அணியின் மாவட்ட அமைப்பாளா் ஆா். துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி அ. அழகிரிபாலன், இலக்கிய அணி நிா்வாகி சித.கருணாநிதி, எ.எஸ்.வி.டி.அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.