மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சா் ஓ.எஸ். மணியன் தலைமை வகித்து, பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜை அறிமுகப்படுத்திவைத்துப் பேசினாா். அப்போது அவா், ‘எஸ். பவுன்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கிராமம் கிராமமாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பூம்புகாா் சங்கா், பாஜக ஓ.பி.சி. அணி மாநிலத் துணைத் தலைவா் அகோரம், பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் ராஜ்குமாா், செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.