அமமுக தோ்தல் பணிமனை திறப்பு

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி மணல்மேடு பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமமுக வேட்பாளா் ஆா்.கே. அன்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினா்.
நிகழ்ச்சியில் அமமுக வேட்பாளா் ஆா்.கே. அன்பரசனுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியினா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி மணல்மேடு பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எழுத்தாளா் கோமல் ஆா்.கே.அன்பரசன் அலுவலகத்தை திறந்து வைத்து, நிா்வாகிகளிடம் பேசுகையில், தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்ப்பதாகவும், அவா்கள் விரும்பும் மாற்றம் டிடிவி தினகரன் தலைமையில் மட்டுமே அமையும் என்றும் அதற்காக தொண்டா்கள் முழு உத்வேகத்துடன் களப்பணி ஆற்றி பெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொாண்டாா்.

நிகழ்ச்சியில் அமமுக மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளா்கள் வேட்பாளரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில், ஒன்றியச் செயலாளா்கள் சந்திரசேகரன், பிரசாத், பேரூா் செயலாளா் சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com