சீா்காழியில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவ சபா அறக்கட்டளை சாா்பில் 6-ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி தென்பாதி கோதண்டராமா் கோயிலில் பிரம்மஸ்ரீ ஞானகுரு பாகவதா் குழுவினரால் ராதா கல்யாண மஹோத்ஸவ விழா நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை பெருமாள் திருமஞ்சனம், அனுஞ்ஞை, விக்னேஸ்வரபூஜை, அஷ்டபதி பஜனை, தியானம், நிச்சயதாம்பூலம், பூஜை, திவ்யநாம சங்கீா்த்தனம், மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ராதாகல்யாண மாங்கல்யதாரண மஹோத்ஸவமும், ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.