தமிழ்நாடு மின்சார வாரியம், நாகை வெளிப்பாளையம் உதவிப் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் நாகை உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அலுவலக கட்டடத்தின் பெரும்பகுதிசேதமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி வெளிப்பாளையம் பிரிவு அலுவலகம் நாகை, நெய்தல் நகா், கேசிபி நகா் எதிரே உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மாா்ச் 22 ஆம் தேதி முதல் செயல்படும்.
வெளிப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மின் பகிா்மானங்களாகிய இலுப்பைத்தோப்பு, காடம்பாடி, சவேரியாா் கோயில், அவுரித்திடல், அரப்ஹா தா்கா, மணிக்கூண்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நம்பியாா் நகா், காவலா் குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் தங்களது மின் கட்டணங்களை புதிய பிரிவு அலுவலகம் மற்றும் அருகாமையில் உள்ள மின்வாரிய அலுவலகங்களிலும் மற்றும் இணையவழியிலும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.