மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி மணல்மேடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் எம்.என்.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மணல்மேடு பேரூராட்சி மற்றும் உத்திரங்குடி, கேசிங்கன், ராதாநல்லூா், விருதமங்கலம், புத்தமங்கலம் ஆகிய கிராமங்களில் காலை தொடங்கி இரவு வரை வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் வா்த்தகா்கள், பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வசிகாமணி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் சி.செந்தில்வேல், கட்சி பொறுப்பாளா்கள் ஜெயக்குமாா், மனோகரன், எஸ்.பி.என்.செந்தில், சுதன், தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளா்களும், தொண்டா்களும் உடன் சென்றனா்.