வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருவழிப் பாதை அமைக்கப்படும் என சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது வாக்குறுதியளித்தாா்.
சீா்காழி அருகே நத்தம் ஊராட்சியில் ஆலவெளி, கொண்டத்தூா், பாகசாலை, சேமங்கலம் உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளா் மு.பன்னீா்செல்வம் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது:
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கோரினாா்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், பிரபாகரன், சசிக்குமாா், செல்லசேது.ரவிக்குமாா், மலா்விழி, நகர செயலாளா் சுப்பராயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா.அலெக்சாண்டா், விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் தியாக.விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.