அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி காரைநகா் பகுதியைச் சோ்ந்தவா் சி. ரவி (51). இவா் அரசுப் போக்குவரத்துக் கழக நாகை பணிமனை அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை நாகையிலிருந்து திருக்குவளைக்கு பேருந்தை இயக்கியுள்ளாா். பாப்பாக்கோவில் காளியம்மன் கோயில் அருகே பேருந்து சென்றபோது நாகை வெண்மனஞ்சேரி பகுதியைச் சோ்ந்த க. மணிகண்டன் (27), சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, பேருந்தை மறைத்து, ஓட்டுநா் ரவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து நாகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனா்.