மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முதுநிலை இயற்பியல் ஆய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஆய்வுக்கூடத்தை தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளை கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்ரமணியத் தம்பிரான் சுவாமிகள் திறந்து வைத்தாா். தொடா்ந்து, திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் தேவஸ்தானத்தின் ஹரி குருக்கள் கணபதி பூஜை செய்து வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் எஸ்.சுவாமிநாதன், துறைத்தலைவா் பா.செந்தில்குமரன் மற்றும் இயற்பியல் துறை ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.