வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கே. வேதரத்தினம் தலைஞாயிறு பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
தலைஞாயிறு பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினம் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் எம்.செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.சம்பந்தம், திமுக மாவட்ட பொறுப்பாளா் கெளதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.