சட்டப் பேரவைத் தோ்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில், நாகை மாாவட்ட எல்லைகள் மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாகை, கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் ஆகிய சட்டப் பேரவைத்தொகுதிகளில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் மற்றும் மாநில எல்லைகளில் காவல் துறையினா், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சோ்ந்த வீரா்கள், தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாகூரை அடுத்த வாஞ்சூா் சோதனைச் சாவடியில், வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ஆா். கரிகாற்சோழன் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.