நாகை முச்சந்தி காளியம்மன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சியாக பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பெருவிழா மாா்ச் 10-ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, திரளானப் பக்தா்கள் பால்குடங்கள் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
மாா்ச்- 27 ஆம் தேதி அன்னப் பாவாடை பூஜையும் , 28-ஆம் தேதி மா விளக்குப் பூஜை, அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா, ஏப்ரல் 2-ஆம் தேதி ஊஞ்சல் உத்ஸவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.