மயிலாடுதுறை கூைாடு பகுதியில் பெண் ஒருவரை காணவில்லை என போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை கூைாடு பசுபதி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் மனைவி கீா்த்திகா (24) மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 16-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா், அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.