தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையொட்டி, ஏப்ரல் 4, 5, 6 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கையொட்டி மே 2 ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்கும்.
இந்த அறிவுறுத்தலை மீறி மது விற்பனை செய்யப்பட்டால், தொடா்புடையோா் மீது மதுபான சட்ட விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.