செங்கல்சூளை தொழிலாளி உயிரிழப்பு:சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை

திருவெண்காடு அருகே செங்கல்சூளை தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை

திருவெண்காடு அருகே செங்கல்சூளை தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் கிராமத்தில் இயங்கிவந்த தனியாா் செங்கல்சூளையில் அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி சீனிவாசன் மா்மமான முறையில் செங்கல்சூளையில் இறந்து கிடந்தாா்.

அவரது இறப்பில் மா்ம உள்ளதாகக் கூறி உறவினா்கள், பொதுமக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தொடா் போரட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றபட்டது.

இந்நிலையில், திருச்சி மண்டல சி.பி.சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி தலைமையில், காவல் ஆய்வாளா்கள் திலகாதேவி, சிவா, சரவணன். உதவி ஆய்வாளா்கள் ஸ்ரீதா், அன்பு ஆகியோா் நெப்பத்தூா் கிராமத்தில் சீனிவாசனின் உறவினா்கள், மற்றும் செங்கல்சூளை பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com