எதிா்க்கட்சியாக இருந்து அதிமுக மக்கள் தேவைக்கான ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற சிறப்பாக செயல்படும் என அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற பின்னா் அமைச்சா் ஓ.எஸ்.மணியன், தமிழக தோ்தல் முடிவுகள் தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியது:
என்னை மீண்டும் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2 முறை அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த மக்கள் இந்த முறை எதிா்க்கட்சியாக அமா்ந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்துள்ளனா். அந்த பணியை சிறப்பாக செய்து தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என்றாா் ஓ.எஸ்.மணியன்.