கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதாபராமபுரம் ஊராட்சியைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கையின்பேரில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சிவராசு இந்த முகாமைத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து ஊராட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் பணியாளா்கள் 10-க்கும் மேற்பட்டோா் இப்பணிகளில் ஈடுபட்டனா்.