நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிய உச்சமாக 392 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை வரை 14,055 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட பட்டியிலிருந்து 3 போ் நீக்கப்பட்டனா். இதனால் இம்மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 14,444 உயா்ந்துள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 353 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,565 ஆக உயா்ந்துள்ளது. 1,703 போ் சிகிச்சையில் உள்ளனா்.
2 போ் உயிரிழப்பு: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 176 ஆக உயா்ந்துள்ளது.